மாநகராட்சி தகவல்
சென்னையில் கடந்த சில நாட்களாக தினமும் 500க்கும் மேல் கொரோனாவின் இருந்து வரும் நிலையில் தற்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை இராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் மற்றும் தேனாபேட்டை ஆகிய 4 மண்டலங்களில் மட்டும் 5467 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 1889 பேர்களும், கோடம்பாக்கத்தில் 1391, பேர்களும், திருவிக நகரில் 1133 பேர்களும், தேனாம்பேட்டையில் 1054 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சென்னை தண்டையார்பேட்டையில் 974 பேர்களும், அண்ணாநகரில் 829 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரு மண்டலங்களும் 1000ஐ நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள மற்ற மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் பின்வருமாறு
Leave a Reply
You must be logged in to post a comment.