shadow

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய சென்னை கல்லூரி மாணவர்கள்

அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்று ஓணம் பண்டிகை என்பதால் சென்னை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்று சென்னை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்கட்டமாக சென்னை லயோலா கல்லூரி மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதாகவும், திருச்சியில் மாணவர்கள் நேற்று முன் தினம் முதலே தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேலும் திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply