சென்னை மாநகர காவல்துறை முதன்முதலாக ஃபேஸ்புக் இணையதளத்தில் இணைந்துள்ளது. “சென்னை சிட்டி போலீஸ்” என்ற பெயரில் கணக்கு துவங்கியுள்ள சென்னை நகர காவல்துறை பொதுமக்கள் தங்களை குறைகளை இனிமேல் ஃபேஸ்புக் மூலமே காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
www.facebook.com/chennai.police என்ற பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ள சென்னை காவல்துறை முகநூலை சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த முகநூல் பக்கத்தில் சென்னை நகர காவல்துறையினரின் சாதனைகள், சிறப்புகள் உள்ளிட்ட பல தகவல்கள் உள்ளன.
பொதுமக்கள் தங்கள் குறைகளையும், புகார்களையும், விபத்துக்களையும் ஃபேஸ்புக்கில் தெரிவிக்கலாம் என்றும், சென்னை காவல்துறை சிறப்பாக செயல்பட தங்களது அரிய ஆலோசனைகளையும் பொதுமக்கள் கூறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.