shadow

சென்னை சென்ட்ரல் – நேரு பூங்கா: நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கோயம்பேடு முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்த மெட்ரோ ரயிலுக்கு பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்கவுள்ளது

சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பாதையின் ரயில் சேவை குறித்த அனைத்து பணிகளும் முடிந்து சோதனை ரயில் ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரெயில் சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனார்.

Leave a Reply