shadow

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.350 கோடிக்கு ஏலம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.350 கோடிக்கு தனியாருக்கு ஏலம் விடப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையிலும் தனியார்மயம் தலை தூக்கியுள்ளது. தற்போது ரயில்வே துறையில் ஸ்டேசன் மாஸ்டர்கள், என்ஜின் டிரைவர்கள், கார்டுகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலையங்களையும் தனியாருக்கு கொடுக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்திய ரயில்வேயில் 7,600 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், 75 ரயில் நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய ஏ-1 பிரிவைச் சேர்ந்ததாகவும், 322 ரயில் நிலையங்கள் ஏ பிரிவைச் சேர்ந்ததாகவும் உள்ளது.

இதே போன்று தென்னக ரயில்வேயில் கிட்டத்தட்ட 608 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், 8 ரயில் நிலையங்கள் ஏ1 பிரிவைச் சேர்ந்ததாகவும், 42 ரயில் நிலையங்கள் ஏ பிரிவைச் சேர்ந்ததாகவும் உள்ளது. இந்த ஏ பிரிவைச் சேர்ந்த 42 ரயில் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட தயார் நிலையில் உள்ளது. அதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கேரளாவின் கோழிக்கூடு ரயில் நிலையங்களும் தனியாருக்கு கொடுக்கப்பட இருக்கின்றன.

ரயில் நிலைய வளர்ச்சித் திட்டத்தின் படி கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிழக்கு மண்டல ரயில்வேயில் ஹவுரா ரயில் நிலையம் ரூ.400 கோடிக்கும், தென்னக ரயில்வே மண்டலத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மூர் மார்க்கெட் வளாகத்தின் தரைத்தளம் ஆகியன ரூ.350 கோடிக்கும் ஏலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply