இயல்பு நிலை திரும்பும் சென்னை
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களாக சென்னையில் போக்குவரத்து முடக்கம்,கடைகள் அடைப்பு உள்ளிட்டவைகளால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் ஊரடங்கில் ஒருசில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்லது
ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைவதையடுத்து நாளை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு பேருந்து வசதி செய்யப்படும் என்றும் சொந்த செலவில் பணியாளர்கள் மாநகரப் பேருந்துகளில் வரவேண்டும் என்றும் கூறப்படுகிறது
இதனை அடுத்து நாளை முதல் அதாவது மே 18 ஆம் தேதி முதல் சென்னையில் மாநகரப் பேருந்து இயக்கப்படும் என்ற தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.