பெரும் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் வரை சாலை முழுவதும் மூடப்பட்டதாகவும், இந்த சாலையில் எந்த வாகனங்களும் செல்ல முடியாது என்றும், அத்துமீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகங்களில் அவசியமின்றி பயணம் செய்ய வேண்டாம் என்று காவல்துறை அறிவித்துள்ள நிலையில் தற்போது சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply