ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன.
நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஆனால் முதல் ஓவரிலேயே ஸ்மித் போல்டாகி ஆட்டமிழந்தார். இருப்பினும் மெக்கல்லம், ரெய்னா, டீபிளஸ்ஸிஸ், தோனி ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூர் அணி, 19.4 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது. விராத் கோஹ்லி 48 ரன்களும், கார்த்திக் 23 ரன்களும், எடுத்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் சென்னை அணி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பீல்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 30 ரன்களும், காம்பீர் 31 ரன்களும், பாண்டே 33 ரன்களும், யூசுப் பதான் 30 ரன்களும் எடுத்தனர்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.