shadow

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக செம்பரபாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 2,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.