shadow

9சமஸ்கிருத வாரம் அனுஷ்டிக்கப்படுவதை எதிர்க்கும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டுமே தமிழ்ப்பெயர்கள் இல்லை. வடமொழியில் பெயர்களை வைத்துக்கொண்டு சமஸ்கிருத மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் தங்கள் பெயரை மாற்றிவிட்டு சமஸ்கிருத வாரம் அனுஷ்டிப்பதை கண்டித்து அறிக்கை விடட்டு என்று அவர் நேற்று சமூகவலைத்தளமான டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் சமஸ்கிருத வாரம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply