shadow

அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பந்து வீச்சாளர்: சாஹலின் மோசமான பதிவு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 4 ஓவர்கள் வீசி 64 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

64 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் என்ற மோசமான சாதனையை சாஹல் பதிவு செய்துள்ளார். இதற்கு முன் ஜோகிந்தர் சர்மா 4 ஓவரில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் அயர்லாந்து வீரர் மெக்கார்த்தி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் 69 ரன்கள் விட்டுக் கொடுத்ததே இதுவரை அதிகபட்ச ரன்களாக உள்ளது. அதேபோல் தென்ஆப்பிரிக்கா வீரர் அபோட் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 2-வது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜெயசூர்யா, டை, வீலர், சாஹல் ஆகியோர் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply