shadow

images (1)

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) காலியாக உள்ள  229 ஏ.எஸ்.ஐ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கில சுருக்கெழுத்து முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Sub Inspector (Stenographer)

காலியிடங்கள்: 229

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

வயது வரம்பு: 01.03.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி

டெக்னிக்கல் தகுதி: சுருக்கெழுத்தில் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகள் எழுதி அதனை கணினியில் ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும் அல்லது இந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: ஆண்கள் 165 செ.மீட்டர் உயரமும், சாதாரண நிலையில் 77 செ.மீட்டர் மார்பளவும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும், உயரத்திற்கேற்ற எடை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016.

 

Leave a Reply