கடந்த 2007ஆம் ஆண்டு ஜோதிகா நடித்த மொழி, பச்சைக்கிளி முத்துச்சரம், மணிகண்டா ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீஸாகியது. அந்த வருடத்துடன் ஜோதிகா, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அவருக்கு தியா, தேவ் ஆகிய இரு குழந்தைகள் பிறந்த நிலையில் ஜோதிகா இனிமேல் சினிமாவில் மீண்டும் நடிக்க மாட்டார் என அனைவருமே நினைத்தனர்.
ஆனால் அனைவருடைய நினைப்பையும் பொய்யாக்கிய ஜோதிகா மீண்டும் ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன படம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள திரைக்கதை அமைப்பு ஆகிய அம்சங்கள் ஜோதிகாவை கவர்ந்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தை சூர்யாவும் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்க முன்வந்ததால் படப்பிடிப்பு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு இதோ தற்போது ரிலீஸ் நிலைக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் இந்த படத்தை நேற்று சென்சார் அதிகாரிகள் ஜோதிகாவின் நடிப்பை பெரிதும் பாராட்டியதாகவும், படத்தில் எவ்வித மாறுதலும் செய்யாமல் படத்திற்கு ‘யூ’ சர்டிபிகேட் வழங்கியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த திரைப்படத்தை போன்று சென்சார் அதிகாரிகளால் சிறு மாறுதலும் இன்றி இதுவரை சமீபத்தில் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.