shadow

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை பிடித்ததில் இருந்தே காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும் சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர்களின் வளையத்தில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அவர்களின் நுங்கம்பாக்கம் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

ப.சிதம்பரம் மட்டுமின்றி அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி ஒன்றில் அடுத்ததாக ப.சிதம்பரம் விரைவில் சிறைக்கு செல்வார் என்று கூறியதற்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தம் உண்டா? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

சிபிஐ அதிகாரிகளின் சோதனை இன்னும் சிலமணி நேரத்தில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் இந்த சோதனை எதற்காக என்று சிபிஐ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply