காவரி நடுவர் மன்றம் கலைப்பு: மத்திய அரசு உத்தரவு
காவிரி நீரை பங்கீடு பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட காவரி நடுவர் மன்றத்தை கலைக்கும் அரசானை ஒன்றை மத்திய அரசு சற்றுமுன்னர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழக அரசின் முயற்சியால் கடந்த 1990 ஆம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றம் ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்த நடுவர் மன்றம் கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.
இதனையடுட்து, கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், காவிரி நடுவர் மன்றத்தை கலைத்து அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.