இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி ..?
* படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. தோள்பட்டை
கீழே சிறிய தலையணை வைத் து உயர்த்திக்கொள்வதும், தலை க்கு சற்று உயர்த்தி தலையணை வைத்துக் கொள்வதும், இடது பக்கமாக திரும்பிப் படுப்பதும் இரவில் ஆசிட் மேலே ஏறாது இருக்க உதவும்.
* முழு வயிறு உணவோடு இரவு படுக்கைக்குச் செல்வ து `ஆசிட்’ சுரப்பதை அதிகரிக்கச் செய்யும். தூங்க செல்வதற்கு 2-3 மணிநேரம் முன்பாக உணவு உட் கொள்வதும், இரவில் `ஸ்நாக்ஸ்’ எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ம் `ஆசிட்’ சுரப்பதை நன்கு கட்டுப் பாட்டில் வைக்கும்.
* சாக்லேட், கேக், காபி போன்ற வை மாலைக்குப் பிறகு எடுத்துக் கொள்வது `ஆசிட்’ சுரப்பதை அதி கரிக்கச் செய்யும். எலுமிச்சை, நெல்லி, தக்காளி, பாட்டிலில் அடைக்கப்பட்ட செயற் கை பானங்கள், கொழுப்புசத்து மிகுந்த உணவுகளை இரவு உணவில் கண்டிப் பாய் தவிர்த்து விடுங்கள்.
* இரவில் உடற்பயிற்சி செ ய்யாதீர்கள். இரவு உணவி ற்குப் பிறகு மெல்ல நடை யும், அமைதியும் `ஆசிட்’ சுரப்பதை வெகுவாய் கட்டு ப்படுத்தும்.
* அதிக உணவு `அசிடிடி’க்கு ஒரு காரணம். சிறு சிறுஉணவாக அவ்வப்போது எ டுத்துக் கொள்ளுங்கள்.
* வாரத்திற்கு இருமுறைக்கு மேல் `அசிடிடி’ இருந்தால் உடனடி மருத்துவரை அணு குங்கள்.
* இரவில் ஆல்கஹால் மிகவும் கெடுதலே.
* முட்டியை மடக்கி கீழே குனியுங்கள். உடலை முன் மடித்து குனியாதீர்கள்.
* இதற்கான மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையுட ன் பயன்படுத்துங்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.