அத்துமீறும் மீனவர்களின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ளுங்கள் என இலங்கை அரசுக்கு சுப்பிரமணிய சுவாமி ஆலோசனை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசின் சிங்களப்படைகள் தமிழக மீனவர்களை அடிக்கடி சிறை பிடிப்பதோடு அவர்களுடைய படகுகளையும் கைப்பற்றி அட்டூழியம் செய்து வருகின்றனர். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எல்லையை தாண்டி வரும் மீனவர்களை விட்டுவிட்டு, அவர்களுடைய படகுகளை மட்டும் பிடித்துக்கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக சுப்பிரமணீய சுவாமி ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனால் மீனவர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் அப்பாவிகள் என்றும், அவர்களுக்கு படகுகளை கொடுத்தனுப்பும் முதலாளிகள் பெரும் பணக்காரர்கள் என்றும் கூறியுள்ள சுப்பிரமணிய சுவாமி, எல்லைதாண்டி மீன் பிடிப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்கள் பாதிப்பு அடைவதாகவும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.