shadow

பாடகி சுசித்ரா மீது போலீஸ் புகார். கைது செய்யப்படுவாரா?

பிரபல பாடகி சுசித்ரா தனது டுவிட்டரில் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வரும் பிரபலங்களின் வீடியோக்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்டியுள்ளது. தனுஷ், அனிருத், சின்மயி, சஞ்சிதா ஷெட்டி, ஆகியோர் குறித்து அதிர்ச்சி தகவல்களையும் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருவது கோலிவுட் திரையுலகம் எந்த அளவுக்கு சாக்கடையாக இருந்து வருகிறது என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய தகவல்களை டுவிட்டரில் பதிவு செய்து வரும் பாடகி சுசித்ரா மீது சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.

சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் ஆபாசப்படங்கள்,இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளதாகவும், இதற்கு காரணமான பாடகி சுசித்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சி தனது புகாரில் கூறியுள்ளது. சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகம் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply