ஈராக்கில் கார்வெடிகுண்டு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாத அமைப்பான அல்கொய்தா தான் இதற்கு காரணம் என்று அந்த நாட்டு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். கிழக்கு சாடர்சிட்டி மாவட்டத்தில் காய்கறி மார்கெட் உள்ளது. அங்கு பொருட்களை வாங்க நேற்று ஏரளமான மக்கள் குவிந்து இருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 51 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த 21ம் தேதி நடந்த தாக்குதலில் 104 பேர் பலியாகினர். ஈராக்கில் அடிக்கடி நடக்கும் இது போன்ற தாக்குதலுக்கு கடந்த ஏப்ரலில் இருந்து நேற்று வரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply