shadow

பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் அமரிந்தர் சிங். சித்து உள்பட 9 அமைச்சர்கள் பதவியேற்பு

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே மாநிலம் பஞ்சாப். இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வென்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில் சற்று முன்னர் முதலமைச்சராக கேப்டன் அமரீந்தர் சிங் பதவியேற்றார். அவரை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து உள்பட 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதல்கட்டமாக இன்று 9 அமைச்சர்கள் பதவியேற்று உள்ளதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply