shadow

முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத முதல் அமைச்சரவை கூட்டம்

o-panneerselvamசென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சற்றும் முன் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்துடன் 32 அமைச்சர்கள் பங்கேற்றனர்.  
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக நடந்த அமைச்சரவை கூட்டம் இதுதான்.

அதுமட்டுமின்றி முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத முதல் அமைச்சரவை கூட்டமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply