கிணற்றில் விழுந்த ஆட்டோ மற்றும் பஸ்: பயங்கர விபத்தில் 20 பேர் பலி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் அருகே நேற்று பேருந்து மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு வாகனங்களும் அருகில் இருந்த கிணற்றில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் இதுவரை 20 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மேலும் 30 பேரை மீட்க மீட்பு படையினர் தீவிரமாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது
மிக வேகமாக வந்த பேருந்து ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதி 2 வாகனங்களும் அருகில் உள்ள கிணற்றில் விழுந்ததாக இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மகாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி அளிக்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விபத்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.