shadow

moneyஅதிகரித்து வரும் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த  ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக கையில் வைத்திருக்கவோ அல்லது வெளியில் எடுத்துச் செல்லவோ தடை விதிக்க வருமான வரித் துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு தனி நபர், எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் ரொக்கமாக வீட்டில் வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச் செல்லவோ எவ்வித கட்டுப்பாடும் இதுவரை இருந்தது இல்லை. ஆனால் அதிக தொகையை கையில் ரொக்கமாக வைத்திருக்கும் தனி நபர்களிடம் அதற்கான வருமான வழி குறித்து கேட்பதில் எழும் சிக்கலை தவிர்ப்பதற்காக இந்த புதிய ஆலோசனை அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த சில ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒன்றுதான் ரூ.10 லட்சத்திற்கும் மேல் தனி நபர் வீட்டில் வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச் செல்லவோ உச்சவரம்பு நிர்ணயம் செய்திருப்பது என்று கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும்போது பான் எண்ணை தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. பான் எண் இல்லாதவர்கள் ஆதார் எண் உள்ளிட்ட அரசு ஆவணங்களை காட்டினால் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

Leave a Reply