காதலித்து துரோகம் செய்த காதலியை மொட்டை அடித்த காதலன்
பிரேசில் நாட்டில் தன்னை காதலித்துவிட்டு பின்னர் துரோகம் செய்து இன்னொரு நபரை காதலித்த இளம்பெண்ணை பொதுமக்கள் மத்தியில் மொட்டை அடித்து தண்டனை கொடுத்துள்ளார் ஒரு காதலர்.
நண்பர்கள் சூழ, பொதுமக்கள் மத்தியில் பொது இடத்தில் காதலியை கட்டாயப்படுத்தி மொட்டை அடித்த காதலன், பின்னர் அவருடைய புருவத்தில் உள்ள முடியையும் நீக்கியுள்ளார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்துள்ளார். பிரேசில் நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற தண்டனை கொடுத்த நிலையில் தற்போது முதல்முறையாக காதல் துரோகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பிரேசில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.