shadow

பெட்ரோல், டீசல் தேவையில்லை. ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிமீ ஓடும் அற்புத பைக்

water bikeபெட்ரோல் டீசலின் தேவையில்லாமல் ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் 500 கிலோமீட்டர் தூரம் தங்குதடையின்றி ஓடும் அற்புதமான பைக் ஒன்றை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த பைக் சாதாரண தண்ணீரில் ஓடுவதோடு மட்டுமின்றி பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. அதற்கு பதிலாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுவதால் சுற்றுச்சூழலுக்கு சிறிதளவு கூட கெடுதல் இல்லை.

‘டி பவர் ஹெச்20’  (T Power H20) என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ள ரிக்கேர்டோ ஆஸேவெடோ, இதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் மாயாஜாலத்தை ரிக்கேர்டோ ஆஸேவெடோ ஆதாரப்பூர்வமாக நிகழ்த்தியும், நிரூபித்தும் காட்டியுள்ளார்.

பெட்ரோல், மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற பைக் மற்றும் கார்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டால், வளைகுடா நாடுகள் ஏழை நாடுகளாக மாறிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Leave a Reply