பிரேசில் நாட்டில் 51வயது பெண் ஒருவருக்கு நேற்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை அவருக்கு பிறந்த 21வது குழந்தை என்பது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பிறந்த 21 குழந்தைகளில் 18 குழந்தைகள் தற்போது உயிருடன் உள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த செபஸ்டினா மரியா, 51வயதிலும் எவ்வித பயமும் இல்லாமல் தனது 21வது குழந்தையை பெற்றெடுத்தார் என அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் தெரிவித்துள்ளார். முதல் குழந்தை பிறக்கும்போது இவருக்கு வயது 13 என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எனக்கு 13 வயதாக இருக்கும்போது முதல் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் அடுத்தடுத்து எனக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு ஒரு குழந்தை என்ற இடைவெளீயில் குழந்தை பிறந்து கொண்டே இருந்தது. செபஸ்டினா மரியாவின் கணவர் மீன் வியாபாரம் செய்து வருகிறாராம். 21வது குழந்தை பிறந்தபோது தனக்கு சிறிதும் பயமில்லை என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
10 பெண் குழந்தைகளும், 11 ஆண் குழந்தைகளும் பெற்ற மரியா, இதை கடவுள் கொடுத்த வரமாகவே தான் கருதுவதாகவும், 21 குழந்தைகள் பெற்றதற்காக நான் எந்த விதத்திலும் வருத்தப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார். தன்னுடைய அனைத்து குழந்தைகளின் மீது தான் பாசமாக இருப்பதாக கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.