shadow

ferry

தென்கொரியாவில் கடந்த 16ஆம் தேதி FERRY என்ற கப்பல் கடலில் முழ்கிய விபத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் உள்பட பலர் பலியாகினர். இதுவரை 171 பேர்கள் இந்த விபத்தில் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஒரு மீட்புப்பணி வீரர் இரண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடியே இறந்து கிடந்த உடல்களை கைப்பற்றியுள்ளார். இருவரும் இணைந்து ஒரே ஒரு LIfe jacket அணிந்திருந்தனர் என்றும் அதன்பின்னர் அவர்களின் உயிர் பிரிந்திருக்கலாம் என்று கூறிய அந்த வீரர், இருவரும் கைகோர்த்தபடியே உயிர்விட்ட நிலையை பார்த்ததும் தான் கதறியழுது கண்ணீர்விட்டதாக கூறினார்.

இருவரது உடல்களை பார்த்து அவர்களுடை பெற்றோர் கதறியழுத கண்ணீர் காட்சி காண்போரையும் கண்ணீர் வரவழைத்ததாக கூறப்படுகிறது.

பலியான இரு மாணவர்களும் தென்கொரியாவில் உள்ள Danwon High School என்ற பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலியான இருவருக்கும் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply