பாலக்கோடு அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செவ்வாய் கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பீகார் படைப் பிரிவை சேர்ந்த எம்.எஸ்.கான் என்ற வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும் 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சண்டை பல மணிநேரம் நீடித்தது. தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக இருக்க பாகிஸ்தான் ராணுவம் இந்த அத்துமீறலில் ஈடுபடுவதாக பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு சரியான தீர்வை இந்தியா காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரே நாளில் 2 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.