தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம நபர் ஒருவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இன்று காலை அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா, பிற்பகலில் ஆளுனரை சந்தித்து அமைச்சரவை அமைக்க அனுமதி கோரினார். இந்நிலையில் நாளை காலை அவர் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. பதவியேற்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. அரங்கை புதுப்பிப்பது, விஐபிகளுக்கு இருக்கை ஒதுக்குவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் இரவு, பகலாக நடக்கிறது.
இந்நிலையில், ஜெயலலிதா பதவியேற்கும் அரங்கில் குண்டு வெடிக்கும் என ஒரு மிரட்டல் தொலைபேசி மூலம் நேற்று நள்ளிரவு வந்ததாகவும், அந்த மர்ம நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.