திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டிடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உடனடியாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் வெளியேற்றப்பட்டு அண்ணா அறிவாலய கட்டிடம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரை எந்தவிதமான வெடிகுண்டுகளும் சிக்கவில்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் இந்தியில் பேசியதால் வடமாநிலத்தை சேர்ந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது

Leave a Reply