shadow

Avadi railway station

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு வெடித்து ஒரு பெண் பலியானார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை சென்னை ஆவடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆவடி ரயில் நிலைய அதிகாரி ஒருவருக்கு இன்று காலை மர்ம தொலைபேசி வந்தது. அதில் இன்னும் சிறிது நேரத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது., இதையடுத்து ஆவடி ரயில் நிலைய அதிகாரியின் புகாரின் பேரில் போலீஸார் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

டெலிபோனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஒரு ரூபாய் காயின் போனில் இருந்து பேசியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் மிரட்டல் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்து ஆவடியிலும் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதால் சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply