shadow

bombசென்னை சென்ட்ரலில் கடந்த 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் தமிழக மக்களுக்கு நீங்காத நிலையில் இன்று காலை வேலூரில் ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவன வணிக வளாகம் அருகே இன்று காலை மர்ம பொருள் ஒன்று இருப்பதை சிலர் பார்த்து காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனை செய்து பார்த்ததில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்ததை கண்டுபிடித்து பின்னர் அதை செயலிழக்க வைத்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட இடத்தின் அருகே வணிக வளாகம், பள்ளிகள், மற்றும் ரயில் நிலையம் இருந்ததால், வெடிகுண்டு வெடித்திருந்தால் கடும் சேதத்தை உண்டாக்கியிருக்கும்.

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்து வருகிறார். வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply