இலங்கை தேர்தல்: தமிழ் வேட்பாளர்களின் வீடுகளில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
இலங்கையில் பெரும் பரபரப்புக்கு இடையே பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அதிபர் ராஜபக்சேவும், ரணில் விக்ரமசிங்கேயும் போட்டியிடுகின்றனர். ராஜபக்சே ஒருவேளை வெற்றி பெற்றாலும் அவரை பிரதமராக்கும் எண்ணம் இல்லை என அதிபர் சிறிசேனா கூறியிருக்கும் நிலையில், அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி தேர்தல் முடிந்தவுடன் தான் தெரியவரும். இந்நிலையில் இலங்கை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகளின் மீது நேற்று கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா வீட்டிலும், ஸ்ரீகாந்தன் வீட்டிலும் கையெறி குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து இலங்கை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் வேட்பாளர்களை பயமுறுத்தவும், தமிழ் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்வதை தடுக்கவும்தான் இந்த கையெறிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து வாக்குச்சாவடிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.