பாபிசிம்ஹாவின் காதல் கனிந்தது. 8ஆம் தேதி நிச்சயதார்த்தம்.
சூதுகவ்வும், பீட்சா, நேரம் போன்ற படங்களில் நடித்த நடிகர் பாபிசிம்ஹா, கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா’ என்ற ஒரே படத்தின் மூலம் உச்சத்தை அடைந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியே அவருடைய கேரக்டரை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த படத்தால் பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில் பாபிசிம்ஹா தற்போது ‘உறுமீன்’ உள்பட சுமார் 10 படங்களில் நடித்து வருகிறார். உறுமீன்’ படத்தின் நாயகி ரேஷ்மி மேனனுடன் பாபிசிம்ஹாவுக்கு காதல் என சமீபத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது வரும் 8ஆம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பாபிசிம்ஹாவின் நெருங்கிய நண்பரும் காமெடி நடிகருமான கருணாகரன், தனது வாழ்த்துக்களை காதல் ஜோடிக்கு தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.