இலங்கை தமிழ் அகதிகள் 153 பேர் ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக புதுச்சேரியில் இருந்து சென்றுகொண்டிருந்தபோது, நடுக்கடலில் படகு கோளாறு காரணமாக தத்தளித்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் அகதிகளாக இருந்த இலங்கைத்தமிழர்கள் கடந்த 13ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்வதற்காக படகு ஒன்றை ஏற்பாடு செய்து சென்றுள்ளனர். இந்த படகில் 32 பெண்கள் மற்றும் 37 குழந்தைகள் உள்பட மொத்தம் 153 பேர் வரை உள்ளனர்.
இவர்கள் சென்ற படகு, கோளாறு காரணமாக நடுக்கடலில் நின்றுகொண்டு தத்தளித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.சட்டவிரோதமாக எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி இம்மாதிரியான பயணம் மேற்கொள்வதால் வரும் ஆபத்தை பலமுறை இலங்கை தமிழர்களுக்கு பல தமிழ் அமைப்புகள் எடுத்து சொல்லியும் அதை கேட்காமல், கிறிஸ்துமஸ் தீவுக்கு சென்றால் அகதிகளுக்கான ஏராளமான சலுகைகளை பெற்று சந்தோஷமாக வாழலாம் என்று எண்ணி பல இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக செல்கின்றனர். இதனால் இம்மாதிரியான ஆபத்துக்களில் சிக்கி தத்தளிக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.