பயணிகள் மகிழ்ச்சி

சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து ஆகியவை இன்னும் தொடங்கப்படாத நிலையில் அசாம் மாநிலத்தில் படகு போக்குவரத்து தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படகு போக்குவரத்து நிர்வாகி ஒருவர் கூறும்போது மே 7ம் தேதி முதல் நாங்கள் படகு போக்குவரத்தை தொடங்கி விட்டோம். அரசு அறிவித்த அனைத்து அறிவுரைகளும் ஏற்று நாங்கள் இந்த போக்குவரத்தை நடத்தி வருகிறோம். மேலும் மாஸ்க் அறியாதவர்களுக்கு டிக்கெட் கொடுப்பது இல்லை என்றும் படகில் பயணம் செய்ய அனுமதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்

சாலை வழி போக்குவரத்து ரயில் போக்குவரத்து ஆகியவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது படகு போக்குவரத்து மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும், அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply