விஜய் பிறந்த நாளுக்காக கேரள ரசிகைகள் நடத்திய ரத்த தான முகாம்
இளையதளபதி விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளையும் அவரது ரசிகர்கள் மிகச்சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இவ்வருட பிறந்த நாளையும் மிக பிரமாண்டமாக கொண்டாட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் அங்கும் கடந்த ஒரு வாரமாக விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அட்வான்ஸ் ஆக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் தீவிர கேரள மாநில பெண் ரசிகைகள் கடந்த 14ஆம் தேதி விஜய் பிறந்த நாளை ரத்த தான முகாம் நடத்தி கொண்டாடியுள்ளனர். இந்த ரத்த தான முகாமில் விஜய் ரசிகைகள் நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்து அரசு மருத்துவமனைக்கு கொடுத்தனர். இந்த சேவை காரணமாக நூற்றுக்கணக்கான நோயாளிகள் பயன் அடைந்ததாகவும் விஜய் ரசிகைகளுக்கு தங்களது நன்றியை மருத்துவர்கள் தெரிவித்து கொண்டனர்.
விஜய்யின் 42வது பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி தமிழகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.