shadow

திருச்சி தோட்ட தொழிற்சாலையில் வெடிவிபத்து. பலியானவர்கள் எத்தனை பேர்?

1திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை 7 மணிக்கு நடந்த பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது அந்த பகுதியில் கனமழை பெய்து வருவதாகவும், மீட்புப்பணிகள் முழுவதும் முடிந்த பின்னரே பலி எண்ணிக்கை குறித்த சரியான தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் வெடிவிபத்து நடந்த நேரத்தில் சுமார் 50 தொழிலாளர்களுக்கும் மேல் பணிபுரிந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்தை சுற்றி கற்கள் வெடித்து சிதறுவதால் தொழிற்சாலை அருகே பொதுமக்கள் யாரையும் அனுமதிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வெடி விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துள்ளன. ஆனால் இதுவரை தொழிற்சாலையின் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply