தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலையில் சட்டப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
5 வருட பிஏ-எல்எல்பி (ஹானர்ஸ்) மற்றும் ஒரு வருட எல்எல்.எம் படிப்புக்கு தகுதியனாவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்விதகுதியாக பிஏ-எல்எல்பி (ஹானர்ஸ்)படிப்புக்கு 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எல்எல்.எம் படிப்புக்கு, எல்எல்.பி படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அனைத்திந்திய சட்ட நுழைவுத்தேர்வு (AILET) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்ரல் 11 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மே 3 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு www.nludelhi.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.