shadow

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: பாஜக மூத்த தலைவர்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாதகமாக நடந்து கொள்வதாக ஏற்கனவே தமிழக மக்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பா.ஜ.க. செயல்படும் என பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார். இதனால் தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முரளிதர் ராவ் கூறியதாவது: ‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம்’ என்றார் முரளிதர ராவ்.

கர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply