shadow

bjp mla
பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் அவர்களை இன்று காலை டெல்லியில் சுட்டுக்கொல்ல மர்ம நபர்கள் முயற்சி செய்ததால் தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை டெல்லியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவரை கொலை செய்வதற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் குறி தவறி அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

டெல்லி விவேக் விகார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ஜிதேந்தர் சிங் வீட்டிற்க்குள் அத்துமீறி நுழைந்து இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அவர் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு செய்துள்ளது.

போலீஸார் சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபர்களை அடையாளம் காண தீவிர முயற்சி செய்து  தேடி வருகின்றனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1r00tfX” standard=”//www.youtube.com/v/ArB9tUV1wIw?fs=1″ vars=”ytid=ArB9tUV1wIw&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6561″ /]

Leave a Reply