பாஜகவும் பாறையும் ஒன்று: சீமான், திருமாவளவனுக்கு H.ராஜா எச்சரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் H.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர்களில் ஒருவர். இவருடைய பேச்சு பல நேரங்களில் திராவிட கட்சியினர்களை அதிர்ச்சி அடைய செய்யும்.
அந்த வகையில் தற்போது அவர் கூறியுள்ள கருத்தும் அப்படித்தான். பாரதிய ஜனதாவுடன் மோதுவது பாறையுடன் மோதுவதற்கு சமம் என்றூம் திருமாவளவன், சீமான் ஆகியோர் கலவரப் புத்தியுடன் இருப்பதாகவும் H.ராஜா சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார். மேலும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தினால் பிரதமரை சந்திக்க தான் நேரம் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்
மேலும் மாட்டிறைச்சி தடை குறித்து அவர் கூறியபோது, ‘நாட்டின மாடுகள்,பசுக்களை காப்பாற்றவே மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை ஐஐடி-ல் மாட்டிறைச்சி உண்ண அனுமதித்த டீனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.