தினகரன் கைதை அடுத்து முக்கிய அமைச்சர்கள் கைதா? எச்.ராஜா போடும் குண்டு
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்கள் கூறும் கருத்துகள் கடந்த சில நாட்களாக அப்படியே நடந்தேறி வருகிறது. ஏற்கனவே இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று கூறியது நடந்தேறியது போலவே தற்போது தினகரன் கைதாவார் என்று கூறிய மற்றொரு கருத்தும் உண்மையாகியுள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள் நடக்கும் குழப்பங்களுக்கு பாஜக தான் காரணம். தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சி செய்கிறது என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல், அண்மை காலமாக பாஜக தலைவர்கள் கூறுவது அனைத்தும் நடந்தேறி வருகிறது என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகிறது. தமிழிசை செளந்திரராஜன் ஒரு தேர்ந்த ஜோசியர் போல எதிர்காலத்தை சரியாக கணிப்பதாக திருநாவுக்கரசர் சமீபத்டில் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், தினகரன் சிறை செல்வது உறுதி என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரனின் கைது மூலம், பாஜக-வின் எச்.ராஜா கூறியிருந்த கருத்து தற்போது உண்மையாகியுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் இனி பல அரசியல் திருப்பங்கள் காத்திருகிறது எனவும், அடுத்தது அமைச்சர்களா?? எனவும் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே, அடுத்ததாக அமைச்சர்கள் யாரேனும் கைது செய்யப்படுவார்களா? தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள அரசியல் திருப்பங்கள் என்ன? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.