தமிழகத்தில் காலியாக உள்ள மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வேட்பாளர்களின் பெயரை அறிவித்துள்ளார். அதன்படி
மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள்:
தூத்துகுடி – கே.ஜெயலட்சுமி
திருநெல்வேலி – வெள்ளையம்மாள்
கோவை – நந்தகுமார்
நகராட்சி தலைவர் வேட்பாளர்கள்:
ராமநாதபுரம் – துரைகண்ணன்
புதுக்கோட்டை – பழ.செல்வம்
விருத்தாச்சலம் – என்.கண்ணன்
கடலூர் – பி.செல்வம்
குன்னூர் – பத்மநாபன்
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்றே வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்வார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.