shadow

paagarkaai

வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய பாகற்ககாய் ஜூஸ் கேன்சர் செல்களை அழிக்கின்றது என்று விஞ்ஞானிகளால நிருபிக்கப்பட்டுள்ளது.

பாகற்காய் உலகம் முழுவதும் பயிரட்டப்படு வந்தாலும், ஜப்பானில் மிகவும் பிரபலமா உள்ளது. ஓக்கினாவா எனும் தீவில் வாழும் மக்களின் நீண்ட ஆயுளுக்கு பாகற்காய் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நமது இந்தியாவில் இதன் மருத்துவ குணங்களுக்காக காலம்காலமாக உபயோகிக்கப்பட்டு வந்தாலும் மேலைய நாடுகளில் இப்பொழுதுதான் பிரபலம் அடைந்து வருகிறது. பாகற்காய் வைரஸ்களுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸ்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

பாகற்காயின் சர்க்கரையை குறைக்கும் குணம் கணைய புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. குளுக்கோஸ் உற்பத்தியாதைக் குறைத்து கேன்சர் செல்களுக்கு உணவாக அமையும் சரக்கரை இல்லாதவாறு செய்கிறது. இதனால் கேன்சர் செல்கள் பட்டினியால் அழிகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகற்காய் ஜீஸிலுள்ள கேன்சரை அழிக்கும் தன்மை மார்பகங்களிலும், குடலிலும், புரோஸ்ட்ரேடிலும், ஈரலிலும் அல்லாது பிற கேன்சர் தாக்கங்களிலும், இரத்தபுற்று நோயிலும் செயல்பட்டாலும் இது மிகுந்த சக்தியுடன் கணையபுற்று நோயில் செயலாற்றுகிறது.

கொலராடோ பல்கலை கழகத்திலுள்ள விஞ்ஞானிகளில் பாகற்காயை உள்ளூர் சந்தையில் வாங்கி விதைகள நீக்கி ஜூஸாக பிழிந்து இரண்டு விதங்களில் சோதனை செய்தனர். நேரடியாக செல்கள் மூலம் செலுத்தியும், உறைக்கப் பட்ட பவுடராக எலிகளுக்கு உணவாக கொடுத்தும் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் கிடைத்த பலன்கள் மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன.

புதிதாக பிழிந்த ஜூஸில் தண்ணீருடன் கலந்து கொடுக்கப்பட்ட சாறு 5 சதவீகிதம் மட்டுமே வீரியத்துடன் காணப்பட்டு கணையபுற்று செல்களான கார்சினிமோவை அழித்தது. 72 மணிநேர சோதனையில் AsPC – 1 மற்றும் Capan-2 கேன்சர் செல்கள் 90 சதவிகிதமும், BxPC-3 and MiaPaCa-2 கேன்சர் செல்கள் 98 சதவிகிதமும் குறைந்து காணப்பட்டது. இதற்க்கு காரணம் பாகற்காய் ஜூஸ் என்று அறியப்பட்டுள்ளது.

மற்றொரு சோதனையில் உறைத்து வைக்கப்பட்ட பாகற்காய் பவுடர் 64 சதவிகிதம் கேன்சர் செல்களை அழித்தது. இந்த செயலாற்றம் புரோஸ்ட்டேட் கான்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கீமோதெரப்பிக்கு சமமானது என்றும் ஆனால் எந்த விதமான பின்விளவுகள் இல்லாமல் பாதுகாப்பனது என்று கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply