சிதம்பரம் அருகே உள்ள தெற்கு சாலியந்தோப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர், தனது பசுவை  குளிப்பாட்ட வாய்க்காலில் இறங்கி பசுவின் மீது ஊற்றுவதற்காக இருகைகளாலும் தண்ணீரை எடுத்துள்ளார். அப்போது முதலை அவரது கையை கடித்துள்ளது. சந்திரசேகர் வேகமாக முதலையின் பிடியில் இருந்து கையை உதறியுள்ளார். அதற்குள் அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு அண்ணாமலைநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

Leave a Reply