பீகார் தோல்வி எதிரொலி. பாஜக மேலிடத்தை விமர்சனம் செய்த சத்ருஹன் சின்ஹா
பீகார் தேர்தல் முடிவ் பிரதமர் மோடி உள்பட பாஜகவின் முன்னணி தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், பாஜகவில் உள்ள ஒருசில தலைவர்களே பாஜக மேலிடத்தை விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான நடிகர் சத்ருகன் சின்கா பீகார் தேர்தல் முடிவு குறித்து கருத்து கூறியபோது, “இந்த தோல்வியின் மூலம் பா.ஜ.க. தலைவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இவரது கருத்து பாஜக வட்டாரங்களை சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடி வரும் லாலு மற்றும் நிதிஷ்குமார் அணிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான நடிகர் சத்ருகன் சின்காவும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ”பிகார் தேர்தல் முடிவுகள் பிகார் மக்களுக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இதை நான் வணங்குகிறேன். மேலும், வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் அதே நேரம், எங்கள் தலைவர்கள் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கூறி உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.