shadow

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
bihar
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதிகள் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக பீகாரில் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர்  நஜிம் ஜைதி அறிவித்துள்ளார்.

பீகாரில் தற்போது நடைபெற்று வரும் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி இன்று அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு அக்டோபர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டமாக 32 தொகுதிகளுக்கு அக்டோபர் 16ஆம் தேதி  தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

3ஆம் கட்டமாக 50 தொகுதிகளுக்கு அக்டோபர் 28ஆம் தேதியும், 4ஆம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதியும், 5ஆம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்றும் நஜிம் ஜைதி கூறினார்.

Leave a Reply