மீண்டும் மீண்டும் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் ரசிகர்கள்: அதிர்ச்சி தகவல்

விஜய் படம் வெளியாகும் போதெல்லாம் அவரது திரைப்படம் அதிகபட்சமாக வசூல் செய்ததாக ரசிகர்கள் மற்றும் சினிமா டிராக்காரர்கள் அளந்துவிடும் கற்பனை கதைதான் இந்த வருமான வரி சோதனை நடைபெற காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வருமானவரித் துறை வெளியிட்ட அறிக்கையில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் காசோலைகள் மற்றும் ரொக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை, பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக விஜய் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர் இதனால் மீண்டும் வருமான வரித்துறையினர் இது குறித்து ஆய்வு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் விஜய்க்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு அவரது ரசிகர்களே அவரை சிக்கலில் மாட்டி விடுவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply