shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எச்சைகளா? காயத்ரி ரகுராம் சர்ச்சை

பொதுவாக விஜய் டிவியின் அனைத்து ஷோக்களுமே டி.ஆர்.பியை அதிகரிப்பதற்காக ஓவர் பில்டப் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர்கள் தங்களுடைய வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

100 நாட்கள் கால்ஷீட் என்றவுடன் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்த நிலையில் ஃபீல்ட் அவுட் ஆன நடிகர், நடிகையர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை ஒப்பேற்ற பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்தனர்.

இதில் ஒரே ஆறுதல் ஜல்லிக்கட்டு போராளி ஜூலி மட்டுமே. ஆனால் அவரும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு கட்டிப்புடி வைத்தியத்தில் ஈடுபட்டு ஜல்லிக்கட்டில் கிடைத்த புகழை இழந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று விஜய்டிவி இன்றைய நாள் நிகழ்ச்சி குறித்து ஒரு புரமோ வெளியிட்டுள்ளது. அதில் காயத்ரி ரகுராம், ‘ ‘இதற்குத்தான் இந்த எச்சைகளோட நான் வரமாட்டேன்னு சொன்னேன்’ என்று கூற அதற்கு கணேஷ் வெங்கட்ராமன் உள்பட பலர் தேவையில்லாமல் வார்த்தையை விட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிக்க, ‘எனக்கு இந்த நிகழ்ச்சி தேவையே இல்லை நான் இதுக்குத்தான் முதலில் இந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்னு சொன்னேன், யார் இவங்க, என்று காயத்ரி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை ‘எச்சை’ என்று காயத்ரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply